WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

இந்திய வேதங்களில் இயேசு

 ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின் பலவிதமான கேள்விகளுக்கு  பதில் 


Share:

தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?

தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?இந்தியாவில் RSS காரரின் முடிவு என்ன ?
Share:

Blue Whale Challenge | Documentary [NEPALI]


Blue Whale Challenge | Documentary [NEPALI]
Share:

Blue Whale Challenge | Documentary [CHINESE]

Blue Whale Challenge | Documentary [CHINESE]

Share:

Blue Whale Challenge | Documentary [FRENCH] Angel TV Angel TV

Angel TV

Blue Whale Challenge | Documentary [FRENCH] Angel TV Angel TV
Share:

Blue Whale Challenge | Documentary [ENGLISH]

Blue Whale Challenge | Documentary [ENGLISH]

Share:

இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில



இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும். இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்களை தற்­கொலை செய்துகொள்ளச் சொல்லும்.நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து. 2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறுவர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது. விளை­யாட்டாக கூட விளை­யாடி பார்க்கக் கூடாத ஒரு விளை­யாட்டு ரஷ்­யாவில் பிறந்து அயல் நாடான இந்­தியா வரை பல உயிர்­களை தற்­கொலை எனும் போர்­வையில் காவு­கொண்­டுள்­ளது புளூவேல். பொது­வாக கணினி விளை­யாட்­டுக்கள் சிறு­வர்­களை முழு­மை­யாக தம் வசம் ஈர்த்து வசி­யப்­ப­டுத்தி விடு­கின்­றன. இதனால் சிறு­வர்கள் கணினி விளை­யாட்­டுக்கு அடி­மை­க­ளாகி கல்விச் செயற்­பாட்டில் இருந்து திசை மாறு­கின்­றனர். அவ்­வாறு இன்று உலகை அச்­சத்­திற்கு உள்­ளாக்கி உள்ள மற்­று­மொரு விளை­யாட்டு புளூவேல். நீலத் திமிங்­கிலம் என தமிழில் அர்த்­தப்­படும் இந்த புளூவேல் கேம், இன்று உலகில் பர­வ­லாக பேசப்­படும், பல­ரது சாபத்திற்குள்ளானதுமான ஒரு விளை­யாட்­டாக மாறி­யுள்­ளது. இந்த சாபத்­திற்கு காரணம் இதை விளை­யா­டு­பவர்­க­ளுக்கு போட்டி முடிவில் கிடைக்கும் பரி­சுதான். பரிசு என்­றதும் அது பணமோ பொருளோ அல்ல உயிர்…! பொது­வாக போட்டி ஒன்றில் வெற்றி பெறு­ப­வ­ருக்­குதான் பரிசு கிடைக்கும். ஆனால் இது விதி­வி­லக்­கா­னது. இந்த போட்­டியில் போட்­டி­யாளர் இறு­தியில் தன் உயிரை போட்டி ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு பரி­ச­ளிக்க வேண்டும். இதுதான் போட்­டியின் விதி. பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முன்னாள் உள­வியல் மாண­வ­ரான ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடகின் என்­பவர் இந்த விளை­யாட்டைக் கண்­டு­பி­டித்­துள்ளார்.சமூ­கத்தில் எந்த மதிப்பும் இல்­லாமல் இருப்­ப­வர்­களை தற்­கொலை செய்­ய­வைத்து அதன் மூலம் சமூ­கத்தை “சுத்தம்” செய்­வ­தாக தன் தரப்பு நியாய வாதத்தை முன்­வைத்து பிலிப் இந்த விளை­யாட்டை அறி­முகம் செய்­துள்ளார்.இந்த விளை­யாட்டால் 2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயிரக்­க­ணக்­கான சிறு­வர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது. போட்­டி­யிட்டால் நாம் ஏன் தற்­கொலை செய்­துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்­க­ளுக்குள் எழு­கின்­ற­தல்­லவா? அது தான் புளூவேல் போட்­டியில் உள்ள மாயை. 50 சவால்­களை கொண்­டுள்ள இப் போட்­டியில் சில தம்மைத்தாமே துன்­பு­றுத்­திக்­கொள்ளும் வகை சவால்களையும் உள்­ள­டக்­கி­யது. இறுதி சவால் தற்­கொலை. இவ்­வாறு அபா­ய­க­ர­மான சவால்­களை கொண்ட புளூவேல் என்­பது இணை­யத்தில் குழு­வாக ஆடப்­படும் ஒரு விளை­யாட்டு. இந்த விளை­யாட்டை நாமாக தேடிப் போய் விளை­யாட வேண்­டிய அவ­சியம் இல்லை. உங்கள் உயிரை பறிக்க இது­வா­கவே இணைய வழியில் வந்து உங்கள் வாசல் கதவை தட்டும். அதன் படி இந்த விளை­யாட்டில் உங்­களை இணைத்­துக்­கொள்­வ­தற்­காக முதலில் மின்­னஞ்சல் மூலம் உங்­க­ளுக்கு ஓர் அழைப்பு வரும். அந்த மின்னஞ்சல் அழைப்பில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்­கொள்ளத் தயாரா?’ என உங்­களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்­பினால், விளை­யாட்டின் விதி­மு­றை­களை உங்­க­ளுக்கு அனுப்­பு­வார்கள். முதலில் பார்ப்­ப­தற்கு மிக எளி­தான விதி­மு­றை­யா­கவே தோன்றும். இவை எம்மை இந்த விளை­யாட்­டுக்கு உள்­ளீர்க்க விரிக்­கப்­படும் மாய­வலை. அறி­யாமலேனும் இம் மாய வலையில் நீங்கள் சிக்­கி­விட்­டீர்­க­ளாயின் இந்த போட்­டியில் உள்ள 50 சாவால்­களை எதிர்­கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும். சவாலை நீங்கள் செய்து முடிப்­பதை காணொளி­களாகவோ அல்­லது புகைப்­ப­ட­மா­கவோ எடுத்து அந்தக் குழு­வுக்கு அனுப்ப வேண்டும். இறு­தி­யான சவாலை நீங்கள் எதிர் கொண்டு செய்­து­விட்டால் நீங்கள் வெற்­றி­யாளர். ஆனால் போட்­டியின் இறுதி 50 ஆவது சவாலை செய்த பின்னர் போட்­டியின் வெற்­றி­யா­ள­ராக பெரு­மிதம் அடைய நீங்கள் இவ்­வுலகில் இருக்க மாட்­டீர்கள். காரணம் அதி­ப­யங்­க­ர­மான அந்த இறுதி சவால் தற்­கொலை செய்­து ­கொள்ள வேண்டும் என்­ப­துதான். இறுதி சவாலில் நீங்கள் ஓடவும் முடி­யா­து, ­ஒ­ளி­யவும் முடி­யாது. முதல் கட்ட சவால்கள் மிக எளி­தா­கவே இருக்கும். ஒரு நீலத் திமிங்­கி­லத்தை வரைய வேண்டும், தனி­யாக இரவு பன்­னி­ரெண்டு மணிக்கு மயா­னத்­திற்கு செல்ல வேண்டும், இனிப்­பு­களை அள்ளி வாய் நிறைய சாப்­பிட வேண்டும். இவற்றில் ஒவ்­வொன்­றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்­க­ளுக்கு பாராட்­டுகள் கிடைக்கும். மெல்ல படி­நி­லைகள் உயர உயர சவால்கள் கடி­ன­மா­கிக்­கொண்டே போகும். அடுத்து வரும் சவால்கள் எம்மை நாமே வதைத்­துக்­கொள்­வது. இதன்படி இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும். இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்­களை தற்­கொலை செய்­து­கொள்ளச் சொல்லும். நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து. இப்­போ­துதான் நாம் அவர்­களின் வலையில் முழு­மை­யாக சிக்­கிக்­கொண்­டுள்­ளதை உணர்வோம். காரணம் ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்­னஞ்சல் தொடர்­பா­டல்­களின் ஊடாக உங்­க­ளுக்கே தெரி­யாமல் உங்கள் கணி­னி­யிலோ அல்லது கைய­டக்க தொலை­பே­சி­யிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ எனப்­படும் வைரஸ் அனுப்­பப்­பட்டு, உங்கள் இர­க­சிய தக­வல்கள் அக்­கு­ழுவின் கையில் சிக்கி இருக்கும். இனி நீங்கள் சவாலை ஏற்­க­வில்லை என்றால், உங்கள் இர­க­சிய தக­வல்கள் கசி­ய­வி­டப்­படும் என மிரட்­டு­வார்கள். பெரும்­பா­லான சிறு­வர்கள், இளம் வய­தி­னரை அந்தக் கும்பல் குறி­வைக்­கி­றது. சிறு­வர்கள் விப­ரீதம் தெரி­யாமல் பயந்­துபோய் தற்­கொலை செய்­து­கொள்­கி­றார்கள். ரஷ்­யாவை மைய­மா­கக்­கொண்டு ஆரம்­பித்த இந்த விளை­யாட்டு, இணையம் மூலம் உலகம் முழு­வ­து­மாக சிறு­வர்கள் உட்­பட சுமார் 3000க்கும் அதி­க­மா­ன­வர்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கடந்த சில மாதங்­க­ளாக உலகம் முழு­வதும் இந்த விளை­யாட்டு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டி­யாகத் தலை­யிட்டு விசா­ரணை மேற்­கொண்­டது. உலகம் முழு­வதும் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு இந்த விளை­யாட்டை பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. விளை­யாட்டின் முக்­கிய சூத்தி­ர­தா­ரி­யான இலியா சிட்ரோவ் எனும் 26 வய­து­டைய இளைஞர் கைது செய்­யப்­பட்டார். இதனால் இந்த விளை­யாட்டு குறித்து பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் நிம்­மதி பெரு மூச்­சு­விட்­டனர். இருந்த போதிலும் மும்­பையைச் சேர்ந்த சிறுவன் மன்­பிரீத் சிங்கின் தற்­கொலை, அவன் நண்­பர்­களின் வாக்­கு­மூலம் போன்­றவை மூலம் புளூவேல் விளை­யாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழு­வதும் பரவ ஆரம்­பித்­துள்­ளது. புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்­கிலம் என்று அர்த்தம். அமெ­ரிக்­காவில் உள்ள ஒரு கடற்­க­ரையில் திமிங்­கி­லங்கள் திடீ­ரென தண்­ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்­தன. அதைப் பார்க்க திமிங்­கிலங்கள் தாமாகத் தற்­கொலை செய்­து­கொண்­டதைப் போலி­ருந்­தது. இதை அடிப்­ப­டை­யாக வைத்துத் தான் இந்த விப­ரீத விளை­யாட்­டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெய­ரிட்­டுள்­ளனர். தற்­கொ­லையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்­பி­னர்­களை தற்­கொ­லைக்குத் தூண்டி, அவர்கள் தற்­கொலை செய்­து­கொள்­வதை நேரலையில் ஒளி­ப­ரப்பி ரசிப்­ப­வர்கள் என இணை­யத்தில் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டிய குழுக்கள் அதி­க­மாக உள்­ளன. ஒரு ஆய்­வின்­படி உலகம் முழு­வதும் தற்­கொ­லையைத் தூண்டும் இணை­ய­த்த­ளங்­களின் எண்­ணிக்கை அதி­க­மாகி இருப்­பதும், அதனால் சுமார் 51 சத­வீதம் சிறு­வர்­களின் மரணம் அதி­க­மாகி இருப்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. தொழில்­நுட்ப வளர்ச்சி அதி­க­ரித்துச் செல்ல செல்ல சிறு­வர்கள் உட்­பட எம்­ம­வர்­க­ளுக்கு இணைய பாவ­னை­யா­னது இல­குவில் கிடைக்கும் ஒன்­றாக மாறி­விட்­டது. ஒரு கால­கட்­டத்தில் நகர்­ப்பு­றங்­களில் செல்வம் படைத்­த­வர்­க­ளுக்கு மாத்­திரம் என வரை­ய­றைக்குள் இருந்த இணை­யப்­பா­வ­னை­யா­னது இன்று கிரா­மப்­பு­றங்­களில் வாழ்­ப­வர்­க­ளுக்கும் இல­குவில் கிடைக்கும் நிலைக்கு விருத்­தி­ய­டைந்­துள்­ளது. இதுவரை­ கா­லமும் நாம் சிறு­வர்­களை இணைய பாவ­னையில் இருந்து கட்­டுப்­ப­டுத்தி வைத்­தது இணைய பாவ­னையால் தீய வழிக்கு சென்று விடு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே. ஆனால் தற்­போது சிறு­வர்­களின் உயிரை காப்­பாற்ற அவர்­களை இணையம் பாவிப்­பதை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய நிலைக்கு இன்­றைய தொழில்­நுட்ப வளர்ச்சி எம்மை ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. எனவே பெற்றோர் தம் பிள்­ளைகள் இணை­யத்தை பயன்­ப­டுத்தும் போது அது குறித்து மிகவும் விழிப்­பு­ணர்­வுடன் இருக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும். இன்­றைய சிறு­வர்கள் தொழில்­நுட்ப அறிவை மித­மாக கொண்­ட­வர்­க­ளாக உள்­ளனர். இதனால் அவர்­க­ளுக்கு இணைய பாவனை குறித்து நாம் புதி­தாக ஒன்றும் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. பல இணைய விளை­யாட்­டுக்கள் பிள்­ளை­களின் பொழு­துப்­போக்­கிற்கு துணை புரிந்­தாலும் உயிர் பறிக்கும் விளை­யாட்­டுக்கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை வழங்க வேண்­டி­யது பெற்­றோரின் முக்­கிய கட­மை­யாகும். அண்­மையில் மது­ரையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் புளூவேல் விளை­யாட்­டிற்கு அடிமை­யாகி தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள நிலையில் இவ்­வி­ளை­யாட்டின் ஆதிக்கம் எமது நாட்­டையும் நெருங்கி விட்­டதை எமக்கு பறை­சாற்றுகின்­றது. எனவே நாம் இது குறித்து மேலும் அவ­தா­ன­மாக இருந்து எமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இணை­யத்தால் இன்று நமக்குப் பல நன்­மைகள் இருந்­தாலும் மெய் உலகைப் பிர­தி­ப­லிக்கும் மெய்­நிகர் உல­கான இணை­யத்­துக்கும் கறுப்பு பக்­கங்கள் உள்­ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்­தங்­களை விபரீதங்­களை நோக்கி இணை­யமும் அழைத்துச் சென்­று­வி­டு­கி­றது. பெற்­றோரின் கவ­னமும். ஆசி­ரி­யர்­களின் பொறுப்பும், நண்­பர்­களின் அக்­க­றை­யும்தான் இளைய சமு­தா­யத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்­களை ஒழிக்க எமது சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் மன அழுத்தம், மன உளைச்­சலைப் போக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் இணைந்து முன்­னெ­டுப்­பதன் மூலம் சிறு­வர்கள் இவ்­வா­றான விளை­யாட்­டுக்­க­ளுக்கு இரை­யா­காமல் பாது­காத்­துக்­கொள்ள முடியும்.
Share:

Pray for france


2 Chronicles -7 :14

que mon peuple, qui est appelé de mon nom s'humilie, et prie, et cherche ma face, et
revienne de ses mauvaises voies, moi aussi j'écouterai des cieux, et je pardonnerai leur
péché, et je guérirai leur pays.


Ezekiel 22 :30

Et j'ai cherché 
parmi eux un homme qui fermât l'enceinte, et qui se tînt à la brèche devant moi pour le 
pays, afin que je ne le détruisisse pas; mais je n'en ai point trouvé.

Jeremiah29 :7

Et cherchez la paix de la ville où je te vous intérim Transportes, et priez l'Éternel pour Elle; Dans sa voiture paix sérums Votre paix.
Psalm 127:1
Si l'Éternel ne bâtit la maison, ceux qui la bâtissent y travaillent en vain; si l'Éternel ne garde la ville, celui qui la garde veille en vain;
Share:

Terrorism in Europe takes an entirely new form

where Terrorism in Europe takes an entirely new form ! We pray for the nations in Europe for Discernment
Share:

Destructive Houston Floods Hurricane Harvey Sadhu Sundar Selvaraj

Destructive Houston Floods Hurricane Harvey Sadhu Sundar Selvaraj Repent! Repent For The kindgom of heaven is at hand
Share:

உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Popular Posts

Blog Archive

Blog Archive